அமெரிக்காவால் நாடு கடத்தப்படும் இந்தியர்கள் உள்ளிட்டோர் தங்கள் சொந்த நாடுகளுக்குச் செல்வதற்கு பாலமாக செயல்பட கோஸ்டா ரிகா நாடு ஒப்புக்கொண்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய அமெரிக்க நாடான கோஸ்டா ரிகாவின் அதிபர் ரோட்ரிகோ சாவ்ஸ் ரோபிள்ஸின் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘இந்தியா மற்றும் மத்திய ஆசியாவைச் சேர்ந்த, அமெரிக்காவில் உள்ள சட்டவிரோத குடியேறிகளை திருப்பி அனுப்புவதற்கு ஒரு ‘பாலமாக’ செயல்பட கோஸ்டா ரிகா ஒப்புக்கொண்டுள்ளது. அதன்படி, 200 புலம்பெயர்ந்தோர் கொண்ட முதல் குழு நாளை (புதன்கிழமை) வணிக விமானத்தில் ஜுவான் சாண்டமரியா சர்வதேச விமான நிலையத்தை வந்தடையும். இவர்கள் இந்தியா மற்றும் மத்திய ஆசியாவில் உள்ள நாடுகளைச் சேர்ந்தவர்கள்.