புதுடெல்லி: இந்திய இறக்குமதி பொருட்களுக்கு 26% கூடுதல் வரியை விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்காவுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்திய பேச்சுவார்த்தை குழு கடந்த வாரம் அமெரிக்காவுக்கு 4 நாள் பயணமாக சென்று இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக அந்நாட்டு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இதில், 26 சதவீதத்தில் இருந்து முழுமையாக விலக்கு வேண்டுமென இந்தியா தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, அமெரிக்க அதிகாரிகள் வரும் ஜூன் 5 அல்லது 6ம் தேதி இந்தியா வர இருப்பதாக வர்த்தக அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
The post அமெரிக்க அதிகாரிகள் அடுத்த வாரம் இந்தியா வருகை appeared first on Dinakaran.