நியூயார்க்: அமெரிக்காவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த தந்தை, மகள் சுட்டு கொல்லப்பட்டனர். இந்தியாவின் குஜராத் மாநிலம் மெஹ்சானாவில் உள்ள கனோடா கிராமத்தை சேர்ந்தவர் பிரதீப் படேல்(56). இவர் கடந்த 2019ம் ஆண்டு முதல் அமெரிக்காவின் வர்ஜீனியா மாகாணத்தில் வசித்து வந்தார். அங்கு அக்கோ மாக் கவுண்டி பகுதியில் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர்களால் நடத்தப்படும் ஒரு பல்பொருள் அங்காடியில் பிரதீப் படேலும், அவரது மகள் ஊர்மி(24) இருவரும் பணி புரிந்து வந்தனர்.
கடந்த 20ம் தேதி பிரதீப் படேலும், அவரது மகள் ஊர்மிளாவும் பணியில் இருந்தபோது பல்பொருள் அங்காடிக்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர் அங்கிருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இந்த துப்பாக்கி சூட்டில் பிரதீப் படேல், ஊர்மி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறயைினர் ஜார்ஜ் பிரேசியர் டெமன் வார்டன் என்ற நபரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
The post அமெரிக்க பல்பொருள் அங்காடியில் இந்திய வம்சாவளி தந்தை, மகள் சுட்டு கொலை: ஒருவர் கைது appeared first on Dinakaran.