புதுடெல்லி: குறிப்பிட்ட சில அமெரிக்கா பொருட்களுக்கான வரியை உயர்த்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. டொனால்டு ட்ரம்ப் இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபர் பதவியில் அமந்த பிறகு இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கான வரியை அதிரடியாக உயர்த்தினார். அதன்பிறகு, இந்தியா எடுக்கும் முதல் பதிலடி நடவடிக்கையாக இது அமைந்துள்ளது.
உலக வர்த்தக அமைப்பிடம் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களை மேற்கோள்காட்டி ப்ளூம்பெர்க் மற்றும் ராய்ட்டர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது: இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபர் பதவியில் அமர்ந்த டொனால்டு ட்ரம்ப் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் பொருட்களுக்கான வரியை அதிரடியாக உயர்த்தினார்.