புதுடெல்லி: இந்தியப் பொருளாதாரம் சிக்கலில் இருக்கும்போது, பிரதமர் மோடி மவுன விரதத்தை தொடங்குகிறார் என்று மக்களவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் கவுரவ் கோகாய் விமர்சித்துள்ளார். இந்திய பொருட்களுக்கு ட்ரம்ப்பின் அமெரிக்க அரசு நிர்வாகம் 27 சதவீதம் வரி விதித்துள்ளது குறித்து பிரதமரையும், பாஜக அரசையும் கோகாய் இவ்வாறு சாடியுள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கவுரவ் கோகாய், "இந்தியப் பொருளாதாரம் சிக்கலில் இருக்கும் நேரத்தில் பிரதமர் மோடி மவுன விரதத்தைத் தொடங்கியுள்ளார். அவர் தனது மவுன விரதத்தை கலைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த வரிகள் நமது சிறுதொழில்கள், சிறு குறு நிறுவனங்கள், விவசாயத் துறைகளின் பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்கும். இந்த விவகாரத்தில் பிரதமர் மவுனமாக இருப்பது ஏன்? பிறநாட்டுத் தலைவர்கள் எல்லாம், தங்களின் விளக்கங்களை கொடுத்து வருகிறார்கள்.