அமெரிக்காவுக்கான பின்னலாடை ஏற்றுமதி நெருக்கடியில் உள்ள நிலையில், வர்த்தக வாய்ப்புகளை தொடர திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் தங்களது உற்பத்தி கட்டணத்தில் இருந்து 3 முதல் 5 சதவீதம் வரை விலக்கு அளிக்க திட்டமிட்டுள்ளனர்.
அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரி விதிக்கப்படும் என்ற அமெரிக்காவின் அறிவிப்பு, நேற்று முன் தினம் முதல் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்துள்ளது. இதனால், ஜவுளித்தொழிலின் முக்கிய அங்கமாக இருக்கும் திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது.