அமைச்சரின் ஆபாசப் பேச்சு மூலம், தமிழகத்தில் கலாச்சாரப் படுகொலைகள் அரங்கேறி வருகின்றன என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார்.
மதுரை திருப்பரங்குன்றம் தியாகராசர் பொறியியல் கல்லூரியில் ‘கம்பர் 2025 – கல்விக்கூடங்களில் கம்பர்’ எனும் மாநில அளவிலான பேச்சுப் போட்டி பரிசளிப்பு விழா நேற்று நடைபெற்றது. கல்லூரித் தலைவர் க.ஹரி தியாகராஜன் தலைமை வகித்தார். எம்ஜிஆர் பல்கலை. முன்னாள் துணைவேந்தர் சுதா சேஷய்யன் வரவேற்றார். விஐடி பல்கலை. இணைவேந்தர் செல்வம் முன்னிலை வகித்தார். போட்டியில் வென்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசு வழங்கி ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது: