சென்னை: தனக்கு எதிராக சிபிஐ பதிவு செய்த மோசடி வழக்கை ரத்து செய்யக் கோரி அமைச்சர் கே.என் நேருவின் சகோதரர் என்.ரவிச்சந்திரன் தாக்கல் செய்த வழக்கில், அமலாக்கத் துறை இடையீட்டு மனு தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
அமைச்சர் கே.என். நேருவின் சகோதரர் என்.ரவிச்சந்திரன் இயக்குனராக உள்ள ‘TRUEDOM EPC INDIA’ நிறுவனம் கடந்த 2013-ம் ஆண்டு இந்தியன் ஓவர்சீஸ் வங்கியிடமிருந்து, 30 கோடி ரூபாய் கடன் பெற்றது. அந்த கடன் தொகையை ‘TRUEDOM EPC INDIA’ நிறுவனம் சகோதர நிறுவனங்களுக்கு மாற்றிவிட்டதாகவும், இதன் மூலம் தங்களுக்கு 22 கோடியே 48 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக வங்கி சார்பில் புகாரளிக்கப்பட்டது.