புதுச்சேரி: பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் சிபிஐயால் கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக அமைச்சர் லட்சுமி நாராயணன் பதவி விலகக் கோரி புதுச்சேரி சட்டப்பேரவையில் காங்கிரஸ், திமுக எம்எல்ஏக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். அதையடுத்து எதிர்கட்சி தலைவர் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டார்.
லஞ்சம் பெற்ற வழக்கில் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் தீனதயாளன் சிபிஐயால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.இந்த விவகாரம் புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத்தில் இன்று (மார்ச்.24) எதிரொலித்தது.