திருநெல்வேலி: “தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், அமைச்சர் பொன்முடி மீது நடவடிக்கை எடுக்க பயப்படுகிறார். ஒவ்வொரு வீட்டு பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் பொன்முடியின் பேச்சை கவனத்தில் கொண்டு வரும் சட்டப்பேரவை தேர்தலில் வாக்களிக்க வேண்டும்,” என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
திருநெல்வேலி வடக்கு மாவட்ட பாஜக சார்பில் திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையம் முன்புள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து நயினார் நாகேந்திரன் அஞ்சலி செலுத்தினார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: இந்த நாள் எனக்கு மிகவும் ராசியான நாள். கடந்த 2001 -ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இதே நாளில் அம்பேத்கர் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு நெல்லை எக்ஸ்பிரஸில் சென்னைக்கு புறப்பட்டு சென்றேன்.