சென்னை: அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வீசிய விவகாரத்தில் கைது செய்யப்பட்ட பாஜக பிரமுகர் ராமகிருஷ்ணன் ஜாமீன் கோரிய வழக்கில் காவல்துறை பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சேறு வீசியது தொடர்பாக, பாஜ பிரமுகர் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் மீது திருவெண்ணைநல்லூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கில் ஜாமீன் கோரி ராமகிருஷ்ணன் தாக்கல் செய்துள்ள மனுவில், தன் மீது தவறாக வழக்கு பதியபட்டுள்ளதாகவும், 20 நாட்களுக்கும் மேலாக சிறையில் உள்ளதால் ஜாமீன் வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார். இந்த வழக்கு நீதிபதி சுந்தர் மோகன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனு தொடர்பாக காவல்துறை பதிலளிக்குமாறு உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 17ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
The post அமைச்சர் மீது சேறு வீசிய பாஜ பிரமுகர் ஜாமீன் மனு: காவல்துறை பதில் தர ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.