அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியங்களில் பெறப்படும் கோரிக்கை மனுக்கள் மீது உடனுக்குடன் தீர்வு காண நடவடிக்கை எடுக்க தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் உத்தரவிட்டுள்ளார்.
தொழிலாளர் துறை அலுவலர்களுக்கான பணித் திறனாய்வுக் கூட்டம் தேனாம்பேட்டை டி.எம்.எஸ், வளாகத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு தொழிலாளர் நல வாரிய கருத்தரங்கு கூடத்தில் நேற்று நடந்தது. தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் தலைமை தாங்கினார். துறை செயலாளர் கொ.வீரராகவ ராவ், தொழிலாளர் ஆணையர் ராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் அமைச்சர் கணேசன் பேசியதாவது: