அரக்கோணம் அருகே போதிய தண்ணீரின்றி நெற்பயிர்கள் காய்ந்து வருவதை தவிர்க்க, மின்மாற்றியை சீரமைக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த பள்ளியாங்குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வசிப்பவர்கள் பெரும்பாலும் விவசாயம் மற்றும் அதைச்சார்ந்த தொழிலை செய்து வருகின்றனர். குறுவை சாகுபடிக்கு பள்ளியாங்குப்பம், வளர்புரம், கீழாந்தூர், மூதூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 500 ஏக்கருக்கு மேலாக நெற்பயிரை விவசாயிகள் நடவு செய்துள்ளனர். பெரும்பாலான மக்கள் கிணற்று நீரை பயன்படுத்தி விவசாயம் செய்து வருகின்றனர்.