சென்னை: சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் நேற்று வழக்குகள் விசாரணையை தொடங்கும் முன்பு வழக்கறிஞர் ஒருவர் முறையீடு ஒன்றை முன் வைத்தார். அரசுக்கு அளித்த விண்ணப்பத்தை பரிசீலிக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள பொதுநல வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அப்போது தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், அரசுக்கு அளிக்கும் விண்ணப்பங்கள் மீது 30 நாட்களுக்குள் முடிவெடுத்து சம்பந்தப்பட்டவர்களுக்கு பதிலளிக்குமாறு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
30 நாட்களுக்குள் விண்ணப்பங்களை பரிசீலிக்காததால் ஏராளமான பொதுநல வழக்குகள் தாக்கல் செய்யப்படுகின்றன. 30 நாட்களில் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படவில்லை என்றால் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்க நேரிடும் என்று எச்சரித்தார். இதையடுத்து இந்த விவகாரத்தை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் உறுதி அளித்தார்.
The post அரசிடம் அளிக்கப்படும் மனுக்களுக்கு 30 நாளில் பதில் தராவிட்டால் கலெக்டர்களுக்கு அபராதம்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அறிவுரை appeared first on Dinakaran.