நியூயார்க்: வங்கதேசத்தில் கடந்த ஆண்டு அரசுக்கு எதிராக துணிச்சலாக போராடிய மாணவிகளுக்கு அமெரிக்க அரசு இன்று விருது வழங்கி பாராட்டுகின்றது. கடந்த ஆண்டு வங்கதேசத்தில் பிரதமர் ஷேக் ஹசீனா அரசுக்கு எதிராக போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தில் மாணவிகள் குழு முக்கிய பங்கு வகித்தது. இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட இந்த மாணவிகள் குழு தலைவர்களுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் துணிச்சல், வலிமை மற்றும் தலைமைத்துவத்திற்காக வழங்கப்படும் விருது வழங்கி பாராட்டுகின்றது.
அமெரிக்கா வெளியுறவு துறை அமைச்சரான மார்கோரூபியோ மற்றும் முதல் பெண்மணி மெலனியா டிரம்ப் ஆகியோர் இந்த விழாவினை நடத்துகின்றனர். விழாவில் வங்கதேசத்தின் மாணவிகள் போராட்டக்குழு தலைவர்களுக்கு அமெரிக்காவின் முதல் வெளியுறவு துறை அமைச்சராக பணியாற்றிய மேடலின் ஆல்பிரைட் பெயரில் விருது வழங்கி கவுரவிக்கப்படும்.
The post அரசுக்கு எதிராக போராட்டம்; வங்கதேச மாணவிகள் துணிச்சலை பாராட்டி அமெரிக்க அரசு விருது appeared first on Dinakaran.