சென்னை : அரசுப் பள்ளிகளின் செலவினத்திற்காக 2025-26ல் மாநில அரசின் பங்காக ரூ.58 கோடி விடுவிக்கப்பட்டது. ஒன்றிய அரசின் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தில் அரசுப் பள்ளிகள் செலவினத்திற்கு நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசு நிதி விடுவிக்காத நிலையில் மாநில அரசின் நிதியை விடுவித்து மாநில திட்ட இயக்குநர் ஆணை பிறப்பித்துள்ளார். ஒன்றிய அரசு 60% மாநில அரசு 40% நிதிப் பகிர்வு செய்யும் நிலையில் ஒன்றிய அரசு நிதி விடுவிக்கவில்லை.
The post அரசுப் பள்ளிகளின் செலவினத்திற்காக 2025-26ல் மாநில அரசின் பங்காக ரூ.58 கோடி விடுவிப்பு appeared first on Dinakaran.