தமிழக வன ஆராய்ச்சி மையங்களில் ஆராய்ச்சிகள் நடைபெறாமல் முடங்கி உள்ளன. வனத்துறை உயரதிகாரிகளின் அலட்சியம் மற்றும் அரசு நிதி ஒதுக்காததால் இந்த பணிகள் நடைபெறவில்லை. ஊழியர்களும் சம்பளமின்றி பணியாற்றும் அவல நிலை உள்ளது.
தமிழகத்தில் மதுரை, திருச்சி, சென்னை, தருமபுரி, கோவை ஆகிய 5 இடங்களில் வன ஆராய்ச்சி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மையங்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள தட்பவெப்ப சூழல், நிலத்தின் தன்மை, அங்குள்ள மாற்றங்கள் உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு புதிய திட்டங்களை ஆராய்ச்சி செய்து செயல்படுத்துவார்கள்.