தாம்பரம் அருகே பெருங்களத்தூரில் 19.66 ஏக்கர் பரப்பளவு நிலம், தமிழக அரசு சார்பில் 1969-ம் ஆண்டு, வருவாய் வாரிய கூட்டுறவு வீட்டு மனை சங்கம், மண்டல கணக்காயர் அலுவலக வீட்டுமனை சங்கம், தலைமை செயலகத்தில் பணிபுரியும் கடை நிலை ஊழியர்கள் சங்கம் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த சுமார் 300 பேருக்கு வழங்கப்பட்டது.
பெருங்களத்தூர் பெரிய ஏரி பகுதி என்பதால் கிராம நத்தம் பிரிவில் குடியிருப்பு நிலமாக மாற்றி அனைவருக்கும் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அரசு ஒதுக்கீடு செய்த இடத்தில் அனைவரும் வீடுகள் கட்டி குடியிருந்து வருகின்றனர். ஆனால், யாருக்கும் பட்டா வழங்கப்படவில்லை.