சென்னை: அரசு திட்டங்களுக்காக கையகப்படுத்திய நிலங்களுக்கு இழப்பீடாக ரூ. 806 கோடி வழங்கப்பட வேண்டியுள்ளது என தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.
ராணிப்பேட்டையில் ஃபெல் நிறுவன ஆலை அமைக்க கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரி சேட்டு, சந்திரசேகர் ஆகியோர் கடந்த 2017-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.