கோவை: தமிழகத்தில் பள்ளிக்கல்வி, உயர் கல்வியை தமிழ் வழியில் படித்து தமிழில் தேர்வெழுதும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப்-1, குரூப்-2 தேர்வுகளில் கடுமையான வினாத்தாள், மதிப்பீடு முறையால் மதிப்பெண்ணை இழந்து அரசு பணி கிடைக்காமல் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் அரசு வேலைவாய்ப்புகளில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம், கடந்த 2010-ல் திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது.