ஊத்தங்கரை: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த ரெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சுற்றுப்புற பகுதியைச் சேர்ந்த 50 மாணவர்கள், 48 மாணவிகள் என மொத்தம் 98 பேர் 8ம் வகுப்பு வரை படித்து வருகின்றனர். இவர்களில் திருப்பதி என்பவரின் மகள் இந்துமதி (11) 6ம் வகுப்பு படித்து வந்தாள். நேற்று வழக்கம்போல், பள்ளிக்கு சென்றாள். மாலை 4 மணியளவில் பள்ளி வளாகத்தில் சக மாணவிகளுடன் ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது, திடீரென வாந்தி எடுத்தவாறு இந்துமதி மயங்கி விழுந்தாள். சிறிது நேரத்தில் அங்கேயே உயிரிழந்தாள். இதுகுறித்து ஊத்தங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
The post அரசு பள்ளியில் மயங்கி விழுந்து மாணவி பலி appeared first on Dinakaran.