நேஷனல் ஹெரால்டு பத்திரிகைக்கு ஏராளமான அரசு விளம்பரங்களை மாநிலங்களை ஆண்ட காங்கிரஸ் முதல்வர்கள் கொடுத்துள்ளனர் என்று பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அனுராக் தாக்குர் குற்றம்சாட்டியுள்ளார்.
நேஷனல் ஹெரால்டு பத்திரிகை வழக்கில், ரூ.5,000 கோடி அளவுக்கு சொத்துக்களை, யங் இந்தியன் நிறுவனத்துக்கு மாற்றப்பட்டதில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 9-ம் தேதி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர். இதைத் தொடர்ந்து விரைவில் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை தொடங்கவுள்ளது.