புதுடெல்லி: உத்தரப் பிரதேசத்தின் அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகத்தில் (ஏஎம்யு) இந்து மாணவர்கள் ஹோலி கொண்டாட அனுமதிக்கப்படவில்லை எனப் புகார் எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில் இந்துத்துவா அமைப்பினர் விடுத்த மிரட்டலால் ஏஎம்யுவில் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.
மத்திய அரசின் பல்கலைக்கழகமான ஏஎம்யுவில் ஹோலி கொண்டாட்டங்களை நடத்த சில இந்து மாணவர்கள் அனுமதி கேட்டிருந்தனர். இதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் வளாகத்தில் ஹோலி விளையாடுவதற்கு எந்தத் தடையும் இல்லை எனவும், இதற்காக அனுமதி கேட்டு ஒரு புதிய பாரம்பரியத்தை உருவாக்க முயலக் கூடாது எனத் தெரிவித்திருந்தது.