இயக்குநர் அட்லி – நடிகர் அல்லு அர்ஜுன் கூட்டணி படத்தில் நாயகியாக நடிக்க நடிகை பிரியங்கா சோப்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
‘புஷ்பா 2’ படத்துக்குப் பிறகு அட்லி இயக்கத்தில் உருவாகும் படத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கவிருப்பது உறுதியாகி இருக்கிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படம் குறித்த அறிவிப்பு ஏப்ரல் 8-ம் தேதி வெளியாகும் என கூறப்படுகிறது. ஆனால், அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.