சென்னை: பேரிடர் மற்றும் அவசர காலங்களில் பொதுமக்களை மீட்பது தொடர்பாக சென்னை போலீஸார் நேற்று பிரம்மாண்ட ஒத்திகை நடத்தினர். அவசர காலங்களில் மக்களை காப்பதற்கும், உயிர்களை மீட்பதற்காகவும் சென்னை காவல் துறையில் பேரிடர் மீட்புக் குழு உருவாக்கப்பட்டது. 290 போலீஸார் கொண்ட இந்த 16 பேரிடர் மீட்புக் குழுவினர் ஆங்காங்கே தனித்தனி குழுவாகப் பிரிந்து சென்று பேரிடர் காலங்களில் மீட்புப் பணிகளில் ஈடுபடுவார்கள்.
அதன் முன்னேற்பாடாக காவல்துறை மீட்புக் குழுவினர் மீட்புப் பணி செயலாக்கம், அவசர தேவைகளில் உயிர் பாதுகாப்பு மற்றும் மீட்புப் பணி தொடர்பாக நேற்று எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் பிரம்மாண்ட ஒத்திகை நிகழ்ச்சியை நடத்தினர். பயிற்சி பெற்ற 290 போலீஸார் அடங்கிய 16 சிறப்பு மீட்புக் குழுக்களும் இந்தப் பயிற்சியில் பங்கேற்றன.