புதுடெல்லி: மகராஷ்டிராவில் தொடரும் அவுரங்கசீப் சர்ச்சையால் மாநிலத்தின் முக்கியக் கோயில்களில் பக்தர்கள் வருகை குறைந்துள்ளது. சுற்றுலா துறையிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மகாராஷ்டிராவின் அவுரங்கசீப் பெயரில் அழைக்கப்பட்ட மாவட்டம், அவுரங்காபாத். இது, அவுரங்கசீப் பெயரை அகற்றவேண்டி, சம்பாஜி நகர் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு விட்டது. சம்பாஜி நகரின் குலாலாபாத்தில்தான் அவுரங்கசீப்பின் கல்லறை அமைந்துள்ளது. இது, மத்திய அரசின் இந்திய தொல்லியல் ஆய்வகத்தால் பாதுகாக்கப்பட்ட வரலாற்று சின்னமாக உள்ளது.