ஐபிஎல் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்த இந்தியாவின் சிறந்த ஆஃப் ஸ்பின்னரான ரவிச்சந்திரன் அஸ்வின், இன்னும் 2 ஆண்டுகள் ஐபிஎல் கிரிக்கெட் ஆடியிருக்கலாம் என்று கூறுகிறார் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த். அஸ்வினின் ஐபிஎல் ஓய்வு அறிவிப்பு பலருக்கும் அதிர்ச்சியளித்துள்ளது.
அஸ்வின், ஐபிஎல் கிரிக்கெட்டில் 7.2 என்ற பிரமாதமான சிக்கன விகிதத்தில் 187 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். கடந்த சீசன் அவருக்குச் சரியாக அமையவில்லை. ரூ.9.75 கோடிக்கு அவரை சிஎஸ்கே நம்பி எடுத்தாலும், அவர் பந்து வீச்சு வீழ்ச்சியடைந்திருந்தது. ஓவருக்கு சராசரியாக 9.12 ரன்கள் என்று கொடுத்தார். உலக அளவில் நடைபெறும் பிற லீகுகளில் ஆடும் வாய்ப்பை எதிர்நோக்குகிறேன் என்கிறார் அஸ்வின்.