சென்னை: ஐபிஎல் 2025 சீசனின் நடுவில் டெவால்ட் பிரெவிஸை ஒப்பந்தம் செய்தது குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. இதில், தென் ஆப்பிரிக்க வீரரின் ஒப்பந்தம் லீக்கின் விதிமுறைகளின்படியே இருந்தது என தெரிவித்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் போது காயம் அடைந்த வேகப் பந்து வீச்சாளர் குர்ஜப்னீத் சிங்குக்கு பதிலாக தென் ஆப்பிரிக்க அணியின் இளம் அதிரடி பேட்ஸ்மேனான டெவால்ட் பிரேவிஸை சிஎஸ்கே அணி ஒப்பந்தம் செய்திருந்தது. குர்ஜப்னீத் சிங் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த ரூ.2.20 கோடி தொகைக்கே டெல் வால்ட் பிரேவிஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.