எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வரலாற்று வெற்றிக்கான ஆட்ட நாயகன் விருதை ஷுப்மன் கில் தனது அசாத்தியமான 430 ரன்களால் தட்டிச் சென்றிருக்கலாம். ஆனால், உண்மையில் இது போன்ற மட்டைப் பிட்சில் 10 விக்கெட்டுகளைச் சாய்த்து வெற்றியை இந்திய அணிக்கு உறுதி செய்தவர் ஆகாஷ் தீப் என்னும் அற்புதன்.
இந்த வெற்றியையும், 10 விக்கெட்டுகள் வீழ்த்தியதையும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தன் சகோதரிக்கு அர்ப்பணித்துள்ளார் ஆகாஷ் தீப். ஆகவே வரிசையாக ரத்தச் சொந்தங்களின் இழப்புகளின் நெடுந்துயரம் மனதை அழுத்தும் ஒரு சூழ்நிலையிலிருந்து ஆகாஷ் தீப் இன்று நாடு போற்றும் ஹீரோவாக உயர்வு பெற்றுள்ளார்.