ஐக்கிய நாடுகள் சபை: ஜம்மு காஷ்மீர் பிரதேசத்தை பாகிஸ்தான் தொடர்ந்து சட்டவிரோதமாக ஆக்கிரமித்து வருவதாகவும், அதிலிருந்து பாகிஸ்தான் உடனடியாக வெளியேற வேண்டும் என்றும் ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா வலியுறுத்தியது.
ஐ.நா. பாதுகாப்பு சபையின் வெளிப்படையான விவாதத்தின் போது ஜம்மு-காஷ்மீர் பிரச்சினையை பாகிஸ்தான் நேற்று எழுப்பியது. இது தொடர்பாக பேசிய வெளியுறவுத்துறை துணை அமைச்சர் தாரிக் ஃபடாமி, “இந்திய ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வசிக்கும் மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்துவது என்ற தனது தீர்மானத்தை ஐநா பாதுகாப்பு அவை நிறைவேற்ற வேண்டும். காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி கிடையாது. ஐநாவின் அதிகாரபூர்வ வரைபடத்தில் ஜம்மு காஷ்மீர் சர்ச்சைக்குரிய பகுதி என்ற குறிப்பிடப்பட்டுள்ளது.” என தெரிவித்தார்.