சென்னை: ஆட்டோவில் இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை தந்த விவகாரத்தில் 2 பேரை 21ம் தேதி வரை சிறையில் அடைக்க செங்கல்பட்டு மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆட்டோ ஓட்டுநர் முத்தமிழ்ச்செல்வன், அவரது நண்பர் தயாளனுக்கு பிப்.21 வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இருவருக்கும் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் ஸ்டான்லி மருத்துவமனையில் உள்ள சிறை கைதிகள் பிரிவில் சிகிச்சை தரவும் உத்தரவிட்டுள்ளது. கிளாம்பாக்கத்தில் இளம்பெண்ணை ஆட்டோவில் கடத்தி பாலியல் தொல்லை கொடுத்ததாக 2 பேரும் நேற்று கைது செய்யப்பட்டனர்.
The post ஆட்டோவில் பாலியல் தொல்லை – பிப்.21 வரை சிறை appeared first on Dinakaran.