சென்னை: வன விலங்குகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் ஆனைமலை புலிகள் சரணாலயம் பகுதியில் புதிதாக சாலை அமைக்க தடை கோரி தொடரப்பட்ட வழக்கில், சாலை அமைக்கும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், திருப்பூரைச் சேர்ந்த கவுதம் என்பவர் தாக்கல் செய்த மனுவில், “கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் சரணாலயம் பகுதியில் திருமூர்த்தி மலையில் இருந்து குருமலைக்கு செல்ல ஏதுவாக ரூ. 49 லட்சம் செலவில் புதிதாக சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த சாலை அமைக்கும் பணிகளுக்கு தடை விதிக்க வேண்டும். இப்பகுதியில் ஏற்கெனவே கான்கிரீட் சாலை உள்ள நிலையில் புதிதாக சாலை அமைத்தால் வன விலங்குகள் வேட்டையாடப்படும்.