ஆனைமலை: பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், கடந்த சில வாரமாக பாக்கு ஏலம் நடைபெற்று வருகிறது. இந்த வாரத்தில் நேற்று நடைபெற்ற பாக்கு ஏலத்தின் போது, சுற்றுவட்டார பகுதியிலிருந்து 2 விவசாயிகள் 5 மூட்டை என மொத்தம் 83 கிலோ பாக்கினை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.
இதில், கொட்டை பாக்கு,காய்ந்த பாக்கு, பழம் பாக்கு என மூன்று தரமாக பிரித்து ஏலம் விடப்பட்டது. அதில் கொட்டை பாக்கு ஒரு கிலோ ரூ.321க்கும், காய்ந்த பாக்கு ஒருகிலோ ரூ.145க்கும், பழம் பாக்கு ஒருகிலோ ரூ.65க்கும் என மொத்தம் 12 ஆயிரத்துக்கு ஏலம்போனது. இதனை 3 வியாபாரிகள் கொள்முதல் செய்தனர். மேற்கண்ட தகவலை ஒழுங்குமுறை விற்பனை கூட அதிகாரிகள் தெரிவித்தனர்.
The post ஆனைமலை விற்பனை கூடத்தில் ரூ.12ஆயிரத்துக்கு பாக்கு ஏலம் appeared first on Dinakaran.