மதுரை: ஆன்லைன் பட்டா விண்ணப்பங்களை மனு செய்தவர்களிடம் விசாரிக்காமல், அவற்றை நிராகரிக்கக் கூடாது என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் அரசியார்பட்டியைச் சேர்ந்த கோமதி, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், "அரசியார்பட்டியில் உள்ள என் சொத்துக்கு பட்டா கேட்டு ஆன்லைனில் விண்ணப்பித்தேன். எனது விண்ணப்பத்தை நிராகரித்து ராஜபாளையம் வட்டாட்சியர் கடந்த 4-ம் தேதி உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு பிறப்பிக்கும் முன்பு வருவாய் அதிகாரிகள் என்னை விசாரிக்கவில்லை. ஆவணங்களைக் கேட்கவில்லை. எனவே, வட்டாட்சியரின் உத்தரவை ரத்து செய்து, பட்டா வழங்க உத்தரவிட வேண்டும்" என்று கூறியிருந்தார்.