வாழ்க்கையின் மகிழ்ச்சியான தருணங்களை புகைப்படம் மற்றும் காணொலியாக பதிவு செய்து பாதுகாக்கும் பழக்கம் மாற்றம் அடைந்து, தற்போது அன்றாட நிகழ்ச்சிகளை குறிப்பாக, குளிர் பானம் குடிப்பதைக் கூட, ‘செல்ஃபி’ எடுத்து நண்பர்களுக்குப் பகிர்வது இளைஞர்களின் பழக்கமாக மாறியிருக்கிறது.
மகிழ்ச்சியான நிகழ்வுகளை ‘செல்ஃபி’ வடிவில் பதிவு செய்து ஓய்வு நேரங்களில் பார்த்து மகிழ்வதும் நண்பர்களுக்கு பகிர்வதும் தவறில்லை. ஆனால், ‘செல்ஃபி’ எடுக்கிறேன் என்ற பெயரில் ஆபத்தான தருணங்களைக் கூட தன்னிலை மறந்து பதிவு செய்யும் போக்கு தற்போது இளைஞர்களிடம் அதிகம் பரவிவிட்டது.