காபூல்: கிழக்கு ஆப்கானிஸ்தானில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 6.0 ரிக்டர் அளவிலான கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஜலாலாபாத் அருகில் பூமியில் 8 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் குனார் மாகாணம் மிக கடுமையாக பாதிக்கப்பட்டது. இங்கு பெரும்பாலான வீடுகள், மண், பாறைகளை கொண்டு கட்டப்பட்டிருந்ததால், நிலநடுக்கத்தை தாக்குப் பிடிக்க முடியாமல் அவை இடிந்து விழுந்தன. பாதிக்கப்பட்ட இடங்களில் உள்ளூர் மக்கள் உதவியுடன் மீட்புக் குழுவினர் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.