சென்னை: பொத்தூரில் அமைந்துள்ள ஆம்ஸ்ட்ராங்கின் நினைவிடத்துக்கு கீழ்ப்பாக்கத்தில் இருந்து நடைபயணம் மேற்கொள்ள அனுமதி கோரிய மனுவை பரிசீலிக்க ஆவடி காவல் ஆணையருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஸ்ரீதர் தாக்கல் செய்திருந்த மனுவில், “சமூகத்தில் பின்தங்கிய அடித்தட்டு மக்களின் முன்னேற்றம், கல்விக்காக பாடுபட்ட முன்னாள் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் நினைவிடம் சென்று மரியாதை செலுத்தும் வகையில் நடைபயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம். இதற்காக கீழ்ப்பாக்கத்தில் இருந்து அவரது நினைவிடம் வரை நடைபயணம் மேற்கொள்ள வரும் மார்ச் 30 அல்லது ஏப்.6 ஆகிய தேதிகளில் ஏதாவது ஒரு நாளில் அனுமதி வழங்க போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும்,” எனக் கோரியிருந்தார்.