புதுடெல்லி: ஆம் ஆத்மி கட்சியின் வந்தனா கவுர், ரோஹித், கிரிஷ் சோனி, மதன் லால், ராஜேஷ் ரிஷி, பி.எஸ்.ஜுன், நரேஷ் யாதவ், பவன் சர்மா ஆகிய 8 எம்எல்.ஏ-க்களுக்கு டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை.
இதனால் அதிருப்தியில் இருந்த 8 பேரும் தங்கள் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தனர். ஆம் ஆத்மி ஊழலில் ஈடுபடுவதால் கட்சியிலிருந்து விலகுவதாக அவர்கள் தெரிவித்திருந்தனர். நாளை மறுநாள் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்த 8 பேரும் நேற்று பாஜகவில் இணைந்தனர்.