புதுடெல்லி: டெல்லி பேரவைத் தேர்தலுக்கு முன்பாக, ஆம் ஆத்மி கட்சித் தொண்டர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறி அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால் தேர்தல் ஆணையத்துக்கு இன்று (பிப்.2) கடிதம் எழுதியுள்ளார்.
புதுடெல்லி தொகுதிக்கு தனியாக தேர்தல் பார்வையாளரை நியமிக்க வேண்டும் என்று அவர் தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் ஆம் ஆத்மி தொண்டர்களைத் தாக்கிய பாஜகவினரைக் கைது செய்யவேண்டும், இதில் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளை இடைநீக்கம் செய்யவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.