பெங்களூரு: ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் மகனுக்கு மர்ம நபர்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
கர்நாடக தகவல் தொழில்நுட்ப மற்றும் பஞ்சாயத்து நிர்வாகத்துறை அமைச்சரும்,காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் மகனுமான பிரியாங்க் கார்கே அண்மையில் முதல்வர் சித்தராமையாவுக்கு கடிதம் ஒன்றை எழுதினார்.