சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி ‘ஆர்எஸ்எஸ்’ பற்றி பேசியது, அரசியல் ரீதியில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர் என்ன பேசினார், எதிர்க்கட்சிகளின் எதிர்வினைகள் என்ன? ஆர்எஸ்எஸ் அமைப்பு, இதை எப்படிப் பார்க்கிறது என்பது பற்றி பார்ப்போம்.
நாடு முழுவதும் 79-வது சுதந்திர தினம் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியேற்றி, நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அவர் தனது உரையில், “வரும் தீபாவளி… இரட்டை தீபாவளியாக மாறும். ஜிஎஸ்டி வரி குறைக்கப்படும். இதன்மூலம் அத்தியாவசியப் பொருட்களின் விலை கணிசமாக குறையும்” என்று கூறியது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.