பெங்களூரு: கடந்த புதன்கிழமை அன்று ஆர்சிபி அணியின் ஐபிஎல் வெற்றி விழா கொண்டாட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் உயிரிழப்பு விவகாரத்தில் அந்த அணியின் மார்க்கெட்டிங் பிரிவு தலைவர் நிகில் சோசாலே உட்பட நான்கு பேரை கார்நாடக மாநில காவல்துறை கைது செய்துள்ளது.
பெங்களூருவில் 11 பேர் உயிரிழந்த விவகாரத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் மார்க்கெட்டிங் மற்றும் வருவாய் பிரிவு தலைவர் நிகில் சோசாலே கைது செய்யப்பட்டுள்ளார். அவர் பெங்களூருவில் இருந்து மும்பை செல்ல இருந்த நிலையில் பெங்களூரு விமான நிலையத்தில் அவரை போலீஸார் கைது செய்தனர்.