பெங்களூரு: ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி சாம்பியன் பட்டம் வென்றதை தொடர்ந்து கடந்த 4-ம் தேதி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதற்காக மைதானத்துக்கு வெளியே லட்சகணக்கான ரசிகர்கள் திரண்டிருந்தனர். அப்போது ஏற்பட்ட நெரிசலில் 11 பேர் இறந்தனர்.
இதுதொடர்பாக கப்பன் பூங்கா போலீஸார் ஆர்சிபி அணியின் நிர்வாகம், பாராட்டு விழா ஏற்பாடுகளை கவனித்துக் கொண்ட டிஎன்ஏ நிறுவனம், கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் ஆகியவற்றின் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.