திருச்சி: “பிற மொழிகளை தாய்மொழியாக கொண்ட மாநிலங்களிலும் இந்தி திணிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது" என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறினார்.
அவர் இன்று அரியலூர் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றார். அதன்பின்னர் சென்னை செல்வதற்காக திருச்சி விமான நிலையத்துக்கு வருகை தந்தார். அப்போது திருமாவளவனிடம், “தமிழக ஆளுநர் தனது எக்ஸ் வலைத்தளத்தில், 'தமிழகத்தில் முன்மொழி தேவை. இளைஞர்களின் எதிர்காலத்தை தமிழகத்தில் தடுக்கின்றனர்' என்று குற்றம்சாட்டியுள்ளாரே” என்ற கேள்விக்கு, “ஆர்எஸ்எஸ் அஜெண்டாவை நடைமுறைப்படுத்தவே நியமிக்கப்பட்டுள்ளவர் தமிழக ஆளுநர் ரவி.