சென்னை: ஒன்றிய – மாநில அரசுகளுக்கிடையேயான உறவில் ஆளுநர் என்பவர் போஸ்ட்மேன் போன்றவர் தான். தற்போதைய உச்சநீதிமன்ற தீர்ப்பும் இதைத்தான் கூறியிருக்கிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழ் மொழிக்கும், தமிழ்நாடு என்ற பெயருக்கும் எதிராக ஆளுநர் செயல்படுகிறார். “தன்னை ஒரு தீவிர பா.ஜ.க.காரராக ஆளுநர் ஆர்.என்.ரவி காட்டிக் கொள்கிறார். தமிழ்மொழியை பாதுகாக்க குரல் கொடுப்பது எப்படி பிளவுவாத அரசியலாகும்? பதவிக்காலம் முடிந்த பிறகும் ஆளுநர் தமிழ்நாட்டில் உள்ளார்
தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணி வலுவாக உள்ளது. திமுக கூட்டணியில் பாமக இடம்பெறுமா என்ற கேள்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மறுப்பு தெரிவித்துள்ளார். அதிமுக – பாஜக இடையே கள்ளக் கூட்டணி என ஏற்கெனவே கூறினேன், தற்போது அது உண்மையாகியுள்ளது. அதிமுக – பாஜக கூட்டணியை 2 முறை தோற்கடித்துள்ளோம், 2026 தேர்தலிலும் நிச்சயம் தோற்கடிப்போம்.
தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக பேசுவதற்கு பிரதமர் இதுவரை நேரம் ஒதுக்கவில்லை. மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு மேற்கொள்ளக் கூடாது. மக்கள் தொகைப்படி தொகுதி மறுசீரமைப்பு மேற்கொண்டால் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்கள் பாதிக்கும். மக்கள் தொகையை கட்டுப்படுத்திய தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்கள் பாதிக்கும். மோடி முதல்வராக இருந்துள்ளதால் அவருக்கு மாநிலங்கள் முக்கியத்துவம் தெரியும் என்று ஆங்கில நாளிதழுக்கு முதல்வர் மு.அக்ஸ்டாலி பேட்டி அளித்துள்ளார்.
The post ஆளுநர் எப்போதுமே தபால்காரர்தான்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.