கிறிஸ் வோக்ஸ் எங்கள் ஆஷஸ் தொடருக்கான திட்டத்திலேயே இல்லை என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய இயக்குநர் ராபர்ட் கீ தெரிவித்ததையடுத்து மனமுடைந்த கிறிஸ் வோக்ஸ் தனது 14 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
அனைத்து 3 வடிவங்களிலும் இங்கிலாந்துக்காக ஆடியவர் கிறிஸ் வோக்ஸ், கடைசியாக இந்திய அணிக்கு எதிராக கை உடைந்த நிலையிலும் மட்டையைத் தூக்கிக் கொண்டு ட்ரா செய்யும் போராட்டத்தில் களமிறங்கி தன் தைரியத்தையும் நாட்டுப்பற்றையும் வெளிப்படுத்தியவரை ராபர்ட் கீ ஏதோ ஒரு விதத்தில் அவமதித்து விட்டதாகவே இங்கிலாந்து கிரிக்கெட் வட்டாரங்கள் கருதுகின்றன.