துபாய்: இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் பேட்ஸ்மேன்களான ரோஹித் சர்மாவும், விராட் கோலியும் தற்போது ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் அந்த அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகின்றனர்.
பவுன்ஸ் ஆடுகளமான பெர்த்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த ஆட்டத்தில் ரோஹித் சர்மா 8 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், விராட் கோலி 8 பந்துகளை சந்தித்து ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறி ஏமாற்றம் அளித்தார்.