இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி வரும் 20-ம் தேதி லீட்ஸில் தொடங்குகிறது. இதில் இந்திய அணியின் ஆடும் லெவனில் இடம் பெறப்போவது நிதிஷ் குமாரா அல்லது ஷர்துல் தாக்கூரா என்ற புதிய சிக்கல் எழுந்துள்ளது.
ஆஸ்திரேலியா தொடரில் 5 டெஸ்ட் போட்டிகளிலுமே ஆடிய நிதிஷ் குமார் ரெட்டி, அங்கு கலக்கு கலக்கென்று கலக்கினார். ஆனால், பவுலிங்கில் அவருக்கு அங்கு சரியான சான்ஸ் கிடைக்கவில்லை. இருந்தாலும் இடையில் சில ஓவர்களை வீசினார். முக்கிய விக்கெட்டுகள் ஒன்றிரண்டை வீழ்த்தினார்.