புதுடெல்லி: ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் சிறப்பாக செயல்படும் வரை இந்திய அணியின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்று தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் கூறியுள்ளார். மேலும் வரவிருக்கும் இங்கிலாந்து டெஸ்ட் சுற்றுப்பயணத்திற்கு இரண்டு மூத்த பேட்ஸ்மேன்களை தேர்வு செய்வதில் தனக்கு எந்த பங்கும் இருக்காது என்றும் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரின் முதல் ஆட்டம் ஜூன் 20-ம் தேதி ஹெட்டிங்லியில் தொடங்குகிறது. இந்நிலையில் இந்தத் தொடருக்கான இந்திய அணியில் 38 வயதான ரோஹித் சர்மா பேட்ஸ்மேனாகவும், கேப்டனாகவும் தொடருவாரா? என்ற சந்தேகம் நிலவி வருகிறது. மேலும் 36 வயதை கடந்துள்ள விராட் கோலியின் டெஸ்ட் கிரிக்கெட் எதிர்காலம் குறித்த கேள்விகளும் எழுந்த வண்ணம் உள்ளது.