மும்பை: இங்கிலாந்தில் இந்திய யு-19 அணிக்கும் இங்கிலாந்து யு-19 அணிக்கும் இடையே நடைபெறும் கிரிக்கெட் தொடருக்கான இந்திய யு-19 அணியில் இளம் அசத்தல் வீரர்களான வைபவ் சூரியவன்ஷி மற்றும் ஆயுஷ் மாத்ரே ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ஆயுஷ் மாத்ரே மும்பைக்காக மிகப் பிரமாதமான முதல் தர கிரிக்கெட் அறிமுக போட்டியில் ஆட ஐபிஎல் தொடரிலும் சிஎஸ்கே அணிக்காகவும் கலக்கினார். இவர்தான் இங்கிலாந்து செல்லும் யு-19 அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.